ஆந்திர சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஜெகன்மோகன் ரெட்டி திட்டம் - சந்திரபாபு நாயுடு


ஆந்திர சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஜெகன்மோகன் ரெட்டி திட்டம் - சந்திரபாபு நாயுடு
x

கோப்புப்படம்

ஆந்திர சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

விஜயவாடா,

ஆந்திர மாநிலம் ஓங்கோலில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்க அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, விஜயவாடாவில் இருந்து ஓங்கோலுக்கு மோட்டார் சைக்கிள் பேரணியாக புறப்பட்டார். வழியில், சிலகலுரிபேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது, 'ஜெகனே வெளியேறு', 'ஆந்திராவை காப்போம்' என்று கோஷங்கள் எழுப்பினார்.

அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-

தெலுங்கு தேசம் கட்சி மீது பழிபோடுவதற்காக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள், தங்கள் வீடுகளுக்கு தாங்களே தீவைத்துக்கொள்கிறார்கள். நெருப்பில் இருந்து மந்திரி குடும்பத்தினரை காப்பாற்றிய போலீசார், வீட்டை காப்பாற்ற முடியவில்லை என்பது சந்தேகமாக உள்ளது.

இனிமேலும் ஜெகன்மோகன் ரெட்டியால் மாநிலத்தை ஆள முடியாது. அதனால்தான் திறமையற்ற அவர் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளார் என்று அவர் பேசினார்.


Next Story