ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ 60 கோடியை கொடுத்துள்ளேன் - சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு தகவல்


ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ 60 கோடியை கொடுத்துள்ளேன் - சுகேஷ் சந்திரசேகர்  பரபரப்பு தகவல்
x

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தான் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ 60 கோடியை கொடுத்துள்ளேன்" என்று சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்ததாக அவர் தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி மந்திரி சத்யேந்தர் ஜெயினுக்கு, 'பாதுகாப்பு அளிப்பதற்காக' ரூ.10 கோடி கொடுத்ததாக, டெல்லி கவர்னர் வி.கே. சக்சேனாவுக்கு, சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரூ200 கோடி பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்ததாகவும் தான் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ 60 கோடியை கொடுத்துள்ளேன் என்று சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார்.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகரை ஆஜர்படுத்த அழைத்து வந்த போது, அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் ஆம் ஆத்மி கட்சியினருக்கு ரூ60 கோடி கொடுத்ததாக டெல்லி துணைநிலை ஆளுநருக்கு சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர் கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது

சுகேஷ் சந்திரசேகர், பணமோசடி மற்றும் பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story