ஜீப்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பரிதாப சாவு

விஜயாப்புரா அருகே ஜீப்-கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விஜயாப்புரா:
விஜயாப்புரா தாலுகா அடஹலி கிராமத்தில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அடஹலி கிராமத்தை சேர்ந்த பிரதீப் (வயது 18), அவரது நண்பர் அனில் (18) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இந்த விபத்து குறித்து விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவான ஜீப் டிரைவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





