பாலக்காடு: தம்பதியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு


பாலக்காடு: தம்பதியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளை - மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு
x

பாலக்காடு அருகே தம்பதியை கட்டிப்போட்டு நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பாலக்காடு:

பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி சுவட்டு பாடம் பகுதியை சேர்ந்தவர் ஜோணி (வயது 54). இவரது மனைவி ஜோளி (48). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. பின்னர் அவர்கள் தம்பதியை தாக்கி மயக்கம் அடையச்செய்தனர். மேலும் கயிறு கொண்டு அவர்களின் கை கால்களையும், துணியை கொண்டு வாயையும் கட்டினர்.

இதையடுத்து 6 பேரும் சேர்ந்து வீட்டில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். முன்னதாக கொள்ளை கும்பல் அவர்களின், கை கால்களை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து சென்று உள்ளது. அதன்பின்னர் மயக்கம் தெளிந்ததும் அவர்கள் 2 பேரும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்றனர்.

பின்னர் கொள்ளை கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அந்்தப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தம்பதியை கட்டிப்போட்டு வீட்டில் கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் அந்தப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story