கேரளாவை உலுக்கிய குண்டுவெடிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்..!


கேரளாவை உலுக்கிய குண்டுவெடிப்பு: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பினராயி விஜயன்..!
x
தினத்தந்தி 29 Oct 2023 10:53 AM GMT (Updated: 29 Oct 2023 11:10 AM GMT)

குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள களமச்சேரியில் மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், 35 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

இந்தநிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தில் அமைதியை பாதுகாப்பது தொடர்பாக கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெறும் காசா ஆதரவு போராட்டத்தில் பங்கேற்றிருந்த நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கேரளா விரைந்துள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கேரள மாநில எல்லையில் வாகன சோதனை கடுமையாக்கப்பட்டுள்ளது.


Next Story