நாட்டு நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


நாட்டு நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x

நாட்டு நலனுக்காக நாளை நாள் முழுவதும் பிரார்த்தனை செய்யப்போவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி வாயிலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "75 ஆண்டுகளுக்குப் பிறகு, மனிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திர ஜெயின் ஆகியோரின் கல்வி மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் புரட்சியைக் கொண்டு வந்தவர்களை நாடு இறுதியாகக் கண்டறிந்தது. பிரதமர் மோடி ஒருபுறம் அவர்களைப் போன்ற தேசபக்தர்களை சிறையில் தள்ளியுள்ளார்,

மேலும் அவருக்கு தேவையான ஒரு நபரை அரவணைத்துள்ளார், அதன் காரணமாக நாடு பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது. பிரதமர் அவர்களை விட ஒரு குற்றவாளியைத் தேர்ந்தெடுத்துள்ளதால், நாட்டின் நிலை குறித்து நான் கவலைப்படுகிறேன். மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

அதனால் நான் உடனடியாக நாளை நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்ய இருக்கிறேன். நீங்களும் பிரதமர் நரேந்திர மோடி தவறு செய்கிறார் என்று நினைத்தால், நாட்டின் நலன் பற்றி நீங்களும் கவலை கொண்டால், நாளை ஹோலி கொண்டாட்டத்திற்கு பின்னர் கொஞ்சம் நேரம் ஒதுக்கி நாட்டின் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

நான் அவர்கள் இருவரைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் நாட்டிற்காக தங்களின் உயிரையும் கொடுப்பார்கள். அவர்களின் மன உறுதியை யாராலும் குலைக்க முடியாது. நான் நாட்டின் நலனை நினைத்து கவலைப்படுகிறேன்" என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.


Next Story