நோயாளியின் நுரையீரலில் 4 செ.மீ. கரப்பான் பூச்சி: உள்ளே நுழைந்தது எப்படி?


நோயாளியின் நுரையீரலில் 4 செ.மீ. கரப்பான் பூச்சி: உள்ளே நுழைந்தது எப்படி?
x

கேரளாவில் 55 வயது நபரின் நுரையீரலில் இருந்து 4 செ.மீ. நீளமுள்ள கரப்பான் பூச்சியை டாக்டர்கள் அகற்றி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் 55 வயது நபரின் நுரையீரலில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் அவருக்கு சிரமம் ஏற்பட்டதையடுத்து நுரையீரலில் இருந்து 4 செ.மீ. நீளமுள்ள கரப்பான் பூச்சியை மருத்துவர்கள் அகற்றி உள்ளார்.

கடந்த பிப்ரவரி 22 தேதி கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் நடந்தது. 55 வயதான ஒருவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்துள்ளது. அதன் பிறகு அவர் மருத்துவரிடம் சென்று இருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது நுரையீரலில் 4 சென்டிமீட்டர் நீளமுள்ள கரப்பான் பூச்சி சிக்கியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

டாக்டர் டிங்கு ஜோசப் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து கரப்பான் பூச்சியை அகற்றினர். கரப்பான் பூச்சி உள்ளே அழுக ஆரம்பித்துவிட்டதால் நோயாளியின் சுவாசப் பிரச்சினை மோசமடைந்திருக்ககூடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நோயாளியின் நுரையீரலில் இருந்து கரப்பான் பூச்சியை அகற்ற டாக்டர்கள் குழுவிற்கு எட்டு மணி நேரம் எடுத்தது. நோயாளிக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்சினைகள் இருந்ததால், அறுவை சிகிச்சை மேலும் கடினமாகிவிட்டது. கரப்பான் பூச்சி நோயாளியின் நுரையீரலை முந்தைய சிகிச்சைக்காக தொண்டையில் வைக்கப்பட்ட குழாய் வழியாக சென்றடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது நோயாளி முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இதுபோன்ற ஒரு விசித்திரமான வழக்கு வந்தது . அங்கு 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து 39 காசுகள் மற்றும் 37 காந்தங்களை மருத்துவர்கள் குழு அகற்றியுள்ளது. இவர் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு வந்தார்.

ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நபர் தனது உடலில் துத்தநாகத்தை அதிகரிக்க இந்த நாணயங்களையும் காந்தங்களையும் விழுங்கியுள்ளார். இது அவரது உடற்கட்டமைப்பிற்கு உதவும் என்று அவர் நினைத்துள்ளார்.


Next Story