தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணைய சேவையில் களமிறங்கிய கேரள அரசு !


தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணைய சேவையில் களமிறங்கிய கேரள அரசு !
x

நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு 'கே.எப்.ஓ.என்' எனப்படும் இணைய சேவையை தொடங்கி உள்ளது. இதன் மூலம் மலிவான விலையில் இன்டர்நெட் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும், மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் மக்களுக்கு இணைய சேவைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் தடையில்லா இணைய சேவைகளை பெற்று வருகின்றனர். ஆனால் நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்கள் தினமும் இணைய சேவைகளை பெற்று வருவதாகவும், 20 கோடிக்கும் மேலான மக்களுக்கு தற்போது வரை இன்டர்நெட் சேவைகள் சரிவர சென்றடையவில்லை என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு டெலிகாம் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள விலையும் முக்கிய காரணமாக விளங்குகிறது.

மலிவு விலை இணைய சேவை :

நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கும் இணைய சேவை சென்றடைவதை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதல் முறையாக கேரள அரசு "கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க்" திட்டத்தை கடந்த ஜூன் 6ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. இந்த திட்டத்தை முதல் மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

"கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க்" என்றால் என்ன ?

கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், "கேரளா பைபர் ஆப்டிக் நெட்ஒர்க்" என்பது கேரளா அரசின் மலிவு விலை இணைய சேவை வழங்கும் திட்டம் ஆகும். இதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 20 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக அதிவேக இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு டெலிகாம் நிறுவனங்களை விட குறைவான விலையில் அதிவேக இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

தற்போது வரை 17,412 அரசு அலுவலகங்களுக்கும் 9000 வீடுகளுக்கும் கேரளா அரசின் இந்த மலிவு விலை இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய சேவை கட்டண விபரம் :

1 More update

Next Story