கேரளாவின் புகழ்பெற்ற படகு போட்டிகள் - 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று நடைபெறுகிறது


கேரளாவின் புகழ்பெற்ற படகு போட்டிகள் - 2 ஆண்டுகளுக்குப் பின் இன்று நடைபெறுகிறது
x

2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் படகு போட்டியை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெறும் நேரு டிராபி படகு போட்டிகளைக் காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தடுவது வழக்கம். புகழ்பெற்ற இந்த படகு போட்டி, கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான படகு போட்டி இன்று நடைபெற உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த போட்டியை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்க உள்ளார். இந்த போட்டிக்களைக் காண 23 லட்சம் ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story