பொய்களைப் பரப்புவதற்கு மட்டுமே பிரதமர் மோடி உத்தரவாதமானவர் - மல்லிகார்ஜுன கார்கே சாடல்


பொய்களைப் பரப்புவதற்கு மட்டுமே பிரதமர் மோடி உத்தரவாதமானவர் - மல்லிகார்ஜுன கார்கே சாடல்
x
தினத்தந்தி 7 Feb 2024 9:37 PM GMT (Updated: 8 Feb 2024 12:02 AM GMT)

அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள் காங்கிரசுக்கு தேசபக்தியை போதிப்பதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசும்போது, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதில் அளித்து நேற்று மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "அரசியலமைப்பில் நம்பிக்கை இல்லாதவர்கள் காங்கிரசுக்கு தேசபக்தியை போதிக்கின்றனர். மோடி ஜி, இரு அவைகளிலும் உங்களின் பேச்சில் காங்கிரசைத்தான் திட்டினீர்கள். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தாலும், தன்னைப் பற்றி பேசாமல், காங்கிரஸ் கட்சியை மட்டுமே பேசினீர்கள். இன்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை பற்றி பேசவில்லை.

உண்மையில், அரசாங்கத்திடம் எந்த தரவுகளும் இல்லை. என்.டி.ஏ. என்பது தரவு கிடைக்காத அரசாங்கம். 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, வேலைவாய்ப்பு தரவு இல்லை, சுகாதார கணக்கெடுப்பு இல்லை. அரசாங்கம் அனைத்து புள்ளிவிவரங்களையும் மறைத்து பொய்களை பரப்புகிறது.

மோடி எதற்கு உத்தரவாதமானவர் என்றால், பொய்களைப் பரப்புவதற்கு மட்டுமே" என்று அவர் பேசினார்.


Next Story