கொல்கத்தா; 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை


கொல்கத்தா; 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை
x

மேற்கு வங்காளத்தில் வேலை சரியாக இல்லை என்ற வருத்தத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் பிரகதி மைதான் பகுதி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பெருநகர கூட்டுறவு வீட்டு வசதி கழகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் தேபோபிரியா பிஸ்வாஸ் (வயது 27).

இவர் விமான பணிப்பெண்ணாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், அவர் வசித்து வந்த கட்டிடத்தின் கீழ் பகுதியில் பலத்த காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.

இதுபற்றி அறிந்ததும் அருகே வசித்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு, எஸ்.எஸ்.கே.எம். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டது.

அதில், பிரியாவின் குடும்பத்தினர் கூறும்போது, நீண்ட நாட்களாக அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு முறையாக பணி வழங்கப்படாத நிலை இருந்தது. இதனால், அவருக்கு மனநல பாதிப்பும் ஏற்பட்டது என தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story