மைசூருவில் வாகனம் மோதி தொழிலாளி பலி


மைசூருவில் வாகனம் மோதி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:45 PM GMT)

மைசூருவில் வாகனம் மோதி தொழிலாளி பலியானார்.

உன்சூா்-

மைசூரு மாவட்டம் உன்சூா் தாலுகா சோமனஹள்ளி கிராமத்தை சோ்ந்தவா் கிரிஷ் (வயது 58). தொழிலாளி. இவா் தனது மோட்டார் சைக்கிளில் மைசூருவிற்கு சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மல்லிநாத்தபுரா கிராமம் அருகே கிரிஷ் சென்றபோது, அந்த வழியாக எதிரே வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கிரிஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பாிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பிளிகெேர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரிசின் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திாிக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து பிளிகெேர போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story