சிங்கத்தை சுத்துப்போட்ட முதலைகள்...காட்டுக்கு ராஜா என நிரூபித்த திக் திக் தருணம்...!


x
தினத்தந்தி 16 Jun 2022 6:37 AM GMT (Updated: 16 Jun 2022 6:43 AM GMT)

காட்டுக்கே ராஜா என அழைக்கப்பட்டு வரும் சிங்கத்தையே முதலைக் கூட்டம் ஒன்று சுத்துப்போட்ட வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் காட்டுக்கே ராஜா என அழைக்கப்பட்டு வரும் சிங்கத்தையே முதலைக் கூட்டம் ஒன்று சுத்துப்போட்ட வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அந்த வகையில் கென்யாவில் உள்ள மசாய் மாரா தேசிய பூங்கா ஒன்றில் ஆண்டனி பெசி என்பவரால் எடுக்கப்பட்ட வீடியோ compass media என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது.

அதில், இறந்த நீர்யானை ஒன்றின் சடலத்தின் மீது நின்றிருந்த சிங்கத்தை தப்பிக்க விடாமல் இருப்பதற்காக சுமார் 40 முதலைகள் சிங்கத்தை சுற்றி வளைத்தது. சில நொடிகள் கழித்து நீர்யானையின் மீது நின்றுக் கொண்டிருந்த அந்த சிங்கம் டப்பென முதலை கூட்டத்துக்கு டிமிக்கு குடுத்து விட்டு தண்ணீரில் குதித்து கட கட வென நீந்தி கரைக்கு சென்று தப்பித்து விட்டது.

இது செய் அல்லது செத்து மடி என்ற சொற்றொடருக்கு ஏற்ப சிங்கத்தின் செயல்பாடு இருந்ததாகவும் நெட்டிசனைகள் குறிபிட்டுள்ளனர்.


Next Story