மத்திய பிரதேசத்தில் புதிதாக 5 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி


மத்திய பிரதேசத்தில் புதிதாக 5 வந்தே பாரத் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
x

மத்திய பிரதேசத்தில் புதிதாக 5 வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

போபால்,

இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் 5 வந்தே பாரத் ரெயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போபாலில் உள்ள ராணி கமலாபதி ரெயில் நிலையத்தில் 5 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால்- ஜபல்பூர், கஜூராஹோ- போபால்- இந்தூர், கோவா- மும்பை, ஹதியா- பாட்னா மற்றும் தார்வாட்- பெங்களூரு ஆகிய வழித்தடங்கள் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கோவா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயிலில் பயணித்த பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.


Next Story