கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்


கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - அதிர்ச்சி சம்பவம்
x

கொடூரன் கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் மலைகவா கிராமத்தை சேர்ந்த நபர் தனது வீட்டின் பின்புறத்தில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு அவர் தனது வீட்டின் பின்புறம் கட்டிவைத்துள்ள பசுமாடுகளுக்கு உணவு கொடுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்துகொண்டிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பசு உரிமையாளர் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இந்த சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கன்றுக்குட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கொடூரனை தீவிரமாக தேடிவருகின்றனர்.


Next Story