வீடு கட்ட கொட்டி வைத்திருந்த மண்ணில் செல்லப்பிராணி நாய் சிறுநீர் கழித்ததால் வாக்குவாதம்; பக்கத்துவீட்டுக்கார் மீது துப்பாக்கிச்சூடு


வீடு கட்ட கொட்டி வைத்திருந்த மண்ணில் செல்லப்பிராணி நாய் சிறுநீர் கழித்ததால் வாக்குவாதம்; பக்கத்துவீட்டுக்கார் மீது துப்பாக்கிச்சூடு
x

வீடு கட்ட கொட்டி வைத்திருந்த மண் மீது செல்லப்பிராணி நாய் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச்சூட்டில் முடிந்தது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் திடவி கிராமத்தை சேர்ந்தவர் சுக்ராம்பால் (வயது 48). இவர் அந்த கிராமத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் கட்டுமான பணிகளுக்காக விலைகொடுத்து வாங்கிய மண்ணை வீட்டின் அருகே கொட்டி வைத்துள்ளார்.

இதனிடையே, சுக்ராம்பால் வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதி அருகே ஆஷு என்பவரின் வீடு உள்ளது. ஆஷூ செல்லப்பிராணி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், ஆஷூவின் செல்லப்பிராணி நாய் இன்று சுக்ராம்பாலின் வீடு கட்டுமான பணிக்காக கூட்டி வைத்திருந்த மண் மீது சிறுநீர் கழித்துள்ளது. இது குறித்து ஆஷூவிடம் சுக்ராம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆஷூ தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் திடிரென சுக்ராமை சுட்டார். இதில், சுக்ராம் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுக்ராம்பாலை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய ஆஷூவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story