அசாமில் திடீர் ஆலங்கட்டி மழை: வீடுகள், விளைநிலங்கள் சேதம்

டிசம்பர் மாதத்தில் அசாமில் ஆலங்கட்டி மழை பெய்வது அரிதான ஒன்று என வானிலை ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்தனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் திப்ருகர், சிவசாகர், தின்சுகிகா உள்பட பல மாவட்டங்களில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. 4,500 வீடுகள் சேதமடைந்தன. மேலும் பள்ளி கட்டிடங்கள், விளை நிலங்கள் சேதமடைந்தன. வீடுகளை இழந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் அசாமில் ஆலங்கட்டி மழை பெய்வது அரிதான ஒன்று என வானிலை ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்தனர். மேலும் வரும் நாட்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





