குரங்கு அம்மை பாதிப்பு: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை


குரங்கு அம்மை பாதிப்பு: கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை
x

உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலுக்குள்ளும் ஊடுருவியுள்ளது.

திருவனந்தபுரம்,

உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 413 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி உள்ளது. இந்தியாவில் குரங்கு அம்மை நுழையாமல் இருந்தது. இந்நிலையில், கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் , 5 மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவித்தார். திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story