புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு


புதிய நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x

மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முன்னதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 20ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ந்தேதி வரை நடைபெறும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.


Next Story