தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - 5 பேர் பலி


தொழிற்சாலையில் விஷவாயு கசிவு - 5 பேர் பலி
x

மத்தியபிரதேசத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் 5 பேர் உயிரிழந்தனர்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் மொரினா மாவட்டம் தனிலா பகுதியில் உணவு பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது.

இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் இன்று காலை 11 மணியளவில் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, தொழிற்சாலையில் திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மயக்கமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story