கள்ளத்தொடர்பு கணவனை தோளில் உப்பு மூட்டையாக சுமக்க வைத்து மனைவி ஊர்வலம்


கள்ளத்தொடர்பு கணவனை தோளில் உப்பு மூட்டையாக சுமக்க வைத்து மனைவி  ஊர்வலம்
x
தினத்தந்தி 5 July 2022 10:18 AM GMT (Updated: 5 July 2022 10:28 AM GMT)

அந்த பெண்ணின் கணவர், வேலைக்கு சென்ற பின்னர், வாலிபரை வீட்டுக்கு அழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்தார்.

தேவாஸ்,

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் போர்பதேவ் கிராமத்தில் திருமணமான இளம்பெண், கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர்களின் வீட்டுக்கு அருகே இளைஞர் ஒருவர் குடியிருந்தார். பக்கத்து வீடு என்பதால், அந்த இளைஞருடன் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிமாகி கள்ளக்காதலாக மாறியது. இதனால் அந்த பெண்ணின் கணவர், வேலைக்கு சென்ற பின்னர், வாலிபரை வீட்டுக்கு அழைத்து அந்த பெண் உல்லாசமாக இருந்து வந்தார்.

திருமணமான பெண்ணின் வீட்டுக்கு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் வாலிபர் ஒருவர் சென்று வந்ததை கிராம மக்கள் பார்த்தனர். அவர்கள் இருவரையும் கண்டித்தனர். அதன்பின்பும் அவர்கள் சந்திப்பதை நிறுத்தி கொள்ளவில்லை. இதையடுத்து அவர்களை கையும்,களவுமாக பிடிக்க கிராமத்தினர் திட்டமிட்டனர். அதன்படி, அந்த பெண்ணின் வீட்டை கண்காணித்து வந்த கிராமத்தினர். சம்பவத்தன்று அந்த பெண்ணை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

அங்கு கிராம மக்கள் முன்னிலையில் அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் கணவரை வரவழைத்து அவரை பெண்ணின் தோளில் ஏற்றி கிராமத்தை சுற்றிவரும்படி கூறினர். இந்த சம்பவத்தை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றி அறிந்த தேவாஸ் மாவட்ட போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவம் நடந்த பகுதியை கண்டறிந்த போலீசார், போர்பதேவ் கிராமத்தை சேர்ந்த 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.


Next Story