வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் திடீர் வாபஸ்...!


வங்கி ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் திடீர் வாபஸ்...!
x

நாடு முழுவதும் நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்து இருந்தனர்

இந்த நிலையில் நாளை 3-வது சனிக்கிழமை என்பதால் வங்கியில் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வங்கி வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உள்ளது

இதனை அடுத்து நாளை நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்


Next Story