டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!


டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு..!!
x

கோப்புப்படம்

டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லியில் நைஜீரியாவை சேர்ந்த நபருக்கு வைரஸ் பாதிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவின் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 19 ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனையில் குரங்கம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தையடுத்து டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நைஜீரிய நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வைரஸ் தொற்றின் அறிகுறிகள் தெரிய 6-13 நாட்கள் ஆகும் மற்றும் 5-12 நாட்களுக்கு இருக்கும். காய்ச்சல், தலைவலி, தசைவலி, குளிர், வீக்கம் நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு ஆகியவை இதன் அறிகுறிகளாகும் என்று தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story