என்.ஐ.ஏ. சோதனை: கேரளாவில் இன்று முழு அடைப்பு


என்.ஐ.ஏ. சோதனை: கேரளாவில் இன்று முழு அடைப்பு
x

என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ அமைப்பின் தலைவர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் புதன்கிழமை நள்ளிரவு முதல் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 70 மையங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது. தேசிய தலைவர் ஓ.எம்.ஏ. சலாம், தேசிய செயலாளர் நஸ்ருதீன் எளமரம் உள்ளிட்ட 106 பேர் நாடு தழுவிய சோதனையில் கைது செய்யப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டனர். மாநிலத் தலைவர் சி.பி. முஹம்மது பஷீர், தேசிய அவை உறுப்பினர் பேராசிரியர். பி. கோயா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறி நடத்தப்பட்ட நாடு தழுவிய என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மாநிலக் குழு இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

22 பேர் கைது செய்யப்பட்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story