டெல்லியில் ஆம் ஆத்மியுடன் எந்த கூட்டணியும் கூடாது; கார்கேவிடம் வலியுறுத்திய காங்கிரஸ் தலைவர்கள்


டெல்லியில் ஆம் ஆத்மியுடன் எந்த கூட்டணியும் கூடாது; கார்கேவிடம் வலியுறுத்திய காங்கிரஸ் தலைவர்கள்
x

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் எந்த கூட்டணியும் இருக்க கூடாது என காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் பிற தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கெஜ்ரிவால் அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசர சட்ட விவகாரம் சூடு பிடித்து உள்ளது. கெஜ்ரிவால் பல மாநில தலைவர்களை சந்தித்து பேசி தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார்.

இந்நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று சந்தித்து பேசினார்.

இதில், டெல்லியில் ஆம் ஆத்மியுடன் எந்த கூட்டணியும் இருக்க கூடாது என காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

மத்திய அரசின் அவசர சட்ட விவகாரத்திலும் ஆம் ஆத்மிக்கு துணையாக காங்கிரஸ் நிற்க கூடாது என அவர்கள் கார்கேவிடம் கூறியுள்ளனர். எனினும், இத்ந விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரங்களை கட்சி தலைமையிடமே அவர்கள் விட்டு உள்ளனர்.

இதற்கு முன் ஆம் ஆத்மியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறும்போது, அவசர சட்ட விவகாரம் ஒட்டுமொத்த நாட்டுடன் தொடர்புடையது. காங்கிரசின் தேசிய தலைமை, மாநில பிரிவுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக சொந்த முடிவை எடுக்க வேண்டும் என கூறினார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் அஜய் மேக்கன், சந்தீப் தீட்சித் மற்றும் பிரதாப் சிங் பாஜ்வா உள்ளிட்டோர், கெஜ்ரிவாலுக்கான ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுபற்றி ஆம் ஆத்மியின் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறும்போது, டெல்லி மாநில அரசின் அதிகாரங்களை, மத்திய அரசு பறிக்க முடியும் என்றால், கர்நாடகாவிலும் கூட இது நடக்கலாம். அதனால், காங்கிரஸ் நன்றாக யோசிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story