நொய்டாவில் ஆஸ்பத்திரியில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்


நொய்டாவில் ஆஸ்பத்திரியில் இருந்து பச்சிளம் குழந்தை கடத்தல்
x

கோப்புப்படம்

பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நொய்டா,

டெல்லி அருகே உள்ள காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக நொய்டாவில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டனர்.

நேற்று அதிகாலையில் குழந்தையின் தாய் எழுந்தபோது, குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் தெரிவித்தார். உடனே இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் அதிகாலை 4.30 மணியளவில் குழந்தையை எடுத்துக்கொண்டு செல்வது அதில் பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து குழந்தையை தேடும் பணிகளை போலீசார் முடுக்கி விட்டு உள்ளனர். பிறந்த பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் நொய்டாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story