திருமணம் ஆகாத விரக்தியில் நர்சு தற்கொலை


திருமணம் ஆகாத விரக்தியில் நர்சு தற்கொலை
x

பெங்களூருவில் திருமணம் ஆகாத விரக்தியில் நர்சு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு:

பெங்களூரு கிரிநகர் டி பிளாக்கில் வசித்து வந்தவர் சுமித்ரா (வயது 32). இவர் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. சுமித்ரா தனது தாய், பாட்டியுடன் வசித்து வந்தார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமித்ராவின் தாயும், ஒரு வருடத்திற்கு முன்பு பாட்டியும் உயிரிழந்தனர்.

இதனால் சுமித்ரா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் சுமித்ரா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தி, தாய் மற்றும் பாட்டியின் மரணத்தால் அவர் இந்த முடிவை தேடியது தெரியவந்து உள்ளது. சம்பவம் குறித்து கிரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story