ஒடிசா அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: 3 பேர் பலி
ஒடிசா அருகே ஜாஜ்பூர் அருகே கோரே ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
புவனேஷ்வர்,
ஒடிசா அருகே ஜாஜ்பூர் அருகே கோரே ரெயில் நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணி அளவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதில் 3 பேர் உயிரிழந்தனர். ரக்கு ரெயில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இரு ரெயில் பாதைகளும் தடைபட்டுள்ளது. சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துள்ளானதில் ரெயில் நிலைய கட்டிடமும் சேதமடைந்தது. மீட்பு குழுவினர், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story