ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட விழா: கோலாகலமாக தொடங்கியது...!


ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில்  தேரோட்ட விழா: கோலாகலமாக தொடங்கியது...!
x
தினத்தந்தி 1 July 2022 9:36 AM IST (Updated: 1 July 2022 10:46 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவில் தேரோட்ட விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகருக்கு அருகே உள்ள புரியில் புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகிறது. இது 42 நாட்கள் நடக்கும், மிக நீண்ட திருவிழாவாகும். பிரகாசமான வண்ணங்கள், உற்சாகமான மக்கள், நெரிசலான கடைகள் மற்றும் மகிழ்ச்சியான கைவினைஞர்கள் உள்ளிட்ட ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொள்ளும் இந்த திருவிழாவிற்கு கொரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபதரா வலம் வர உள்ளனர்.

பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில்,

தேரோட்டத்தின் சிறப்பு நாளில் வாழ்த்துக்கள். ஜெகநாதரின் நிலையான ஆசீர்வாதத்திற்காக நாம் பிரார்த்தனை செய்வோம். நாம் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்..," என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story