ஓணம் பண்டிகை: வரும் 6-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு


ஓணம் பண்டிகை: வரும் 6-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை  திறப்பு
x
தினத்தந்தி 3 Sep 2022 7:54 AM GMT (Updated: 3 Sep 2022 8:05 AM GMT)

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 6-ந் தேதி திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ஒணம் பண்டி கையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் வரும் 6-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார்.

தொடர்ந்து மறுநாள் 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், களபாபி ஷேகம், கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜை, வழிபாடுகளும் நடைபெறும்.

முன்னதாக 8-ந் தேதி திருவோண தினத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி, பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, செப்டம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நிலக்கல் மகாதேவர் கோவிலில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவும் நடைபெறும். ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை 10-ந் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 16-ந் தேதி திறக்கப்படும். 21-ந்தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


Next Story