டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி


டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி
x

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண்ணுக்கு டெல்லியில் குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.

புதுடெல்லி,

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத்தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதனால் இந்தியாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தற்போது குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் என்றும், அவருக்கு லேசான காய்ச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் மட்டும் இதுவரை 4 பேருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ளது. இதில் ஒருவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story