அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் ஆறு மத விருப்பங்கள் மட்டுமே இருக்கும்


அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் ஆறு மத விருப்பங்கள் மட்டுமே இருக்கும்
x

PTI

பதிலளிப்பவர்கள் கூடுதலாக வேறு எந்த மதத்தின் பெயரையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் எழுதலாம் என்றாலும், தனி குறியீடு வழங்கப்படாது.

புதுடெல்லி

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் படிவத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தம், சீக்கியர் மற்றும் ஜைனர்கள் மட்டுமே தனித்தனி மத விருப்பங்களாக கணக்கிடப்படும். தனி மதமாக எண்ணப்பட வேண்டும் என்று பல சமூகங்கள் கோரிக்கை விடுத்து இருந்தாலும் ஆறு மத விருப்பங்கள் மட்டுமே படிவங்களில் சேர்க்கப்படுகின்றன.

ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவில் உள்ள இயற்கையை வணங்கும் ஆதிவாசிகள் தங்கள் சர்னா மதத்தை தனி மதமாக சேர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், அதே நேரத்தில் கர்நாடகாவின் லிங்காயத்துகளும் இதே கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.

பதிலளிப்பவர்கள் கூடுதலாக வேறு எந்த மதத்தின் பெயரையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் எழுதலாம் என்றாலும், தனி குறியீடு வழங்கப்படாது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள், உண்மையில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மதத்திற்கான விரிவான குறியீடுகளை வடிவமைத்துள்ளனர். இருப்பினும், அவை கைவிடப்பட்டு, புள்ளிவிவரங்கள் பயனர்கள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட பின்னர் இறுதி அட்டவணையில் ஆறு மதக் குறியீடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும் படிவத்தில் நீங்கள் தொகுக்கப்பட்ட அல்லது பாட்டில் தண்ணீரை உட்கொள்கிறீர்களா?என அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது புதிய கேள்விகளில் ஒன்றாக இருக்கும்.

மேலும் கல்வி, திருமணம் போன்ற தற்போதைய விருப்பங்கள் தவிர, ஒரு தனிநபர் அல்லது குடும்பத்தின் இடம்பெயர்வுக்கு காரணமான காரணிகள் பற்றி கேள்விகளும் இருக்கும். படிவத்தில் "இயற்கை பேரழிவுகள்" ஒரு புதிய விருப்பமாக அறிமுகப்படுத்தப்படும்.

1 More update

Next Story