அவைக்குள் பதாகைகள் கொண்டுவர அனுமதி இல்லை : சபாநாயகர் ஓம் பிர்லா


அவைக்குள் பதாகைகள் கொண்டுவர அனுமதி இல்லை : சபாநாயகர் ஓம் பிர்லா
x

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கபட்டது.

புதுடெல்லி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் நாளில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் போராட்டம் நடத்தியதால் முடங்கியது.

இந்நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். மக்களவையில் பதாகைகளை ஏந்தி அவைத் தலைவரின் இருக்கை அருகே வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அப்போது, விதிகளின்படி அவைக்குள் பதாகைகளை கொண்டு வர அனுமதி இல்லை எனத் தெரிவித்த ஓம் பிர்லா, பிற்பகல் 2 மணி வரை மக்க

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியை தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் அறிவித்தனர்.விதிகளின்படி, சபைக்குள் பதாகைகளை கொண்டு வர அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா, சபை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் சிங்கப்பூர் பயணத்திற்கு அனுமதி வழங்காததைக் கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.


Next Story