மதுபான கடை திறக்க எதிர்ப்பு; மாணவர்கள் போராட்டம்


மதுபான கடை திறக்க எதிர்ப்பு; மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2022 7:00 PM GMT (Updated: 8 Oct 2022 7:01 PM GMT)

சிக்கமகளூரு டவுன் பகுதியில் மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் சுமுக் நகர் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கான உண்டு உறைவிட பள்ளி உள்ளது. மேலும் தனியார் பள்ளியும் உள்ளது. அந்த பள்ளி அருகே அரசு சார்பில் புதிதாக மதுபான கடை ஒன்று கட்டப்பட்டு திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பள்ளிகளில் படித்து வரும் மாணவ-மாணவிகள் நேற்றுமுன்தினம் ஆசாத் பூங்காவில் ேபாராட்டம் நடத்தினர். மேலும் அவர்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் மதுபான கடை வழியாகதான் சென்று வருகிறோம்.

இதனால் அந்த மதுபான கடையை திறப்பதற்கு அனுமதி வழங்க கூடாது. இதற்காக அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் ரமேசை சந்தித்து தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்தனர்.


Next Story