இந்தியா-வங்காளதேசம் இடையே பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்


இந்தியா-வங்காளதேசம் இடையே பயணிகள் ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கம்
x

கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

கொல்கத்தா,

உலக நாடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக கொரோனா பெருந்தொற்றால் மக்கள் பெரிதும் பாதிப்புகளை சந்தித்தனர். வீடுகளில் முடங்கினர். பொருளாதார தேக்கநிலை, வருவாய் இழப்புகளை சந்தித்தனர். ரெயில், விமான, பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் போக்குவரத்து ரெயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரெயில் சேவை இன்று மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன்படி, பந்தன் எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா - குல்னா - கொல்கத்தா) & மைத்ரீ எக்ஸ்பிரஸ் (கொல்கத்தா - டாக்கா - கொல்கத்தா) ஆகிய ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

வங்காளதேசத்தில் இருந்து சுற்றுலா, மருத்துவம் மற்றும் பொருட்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்காக பயணிகள் வருகின்றனர் என கிழக்கு ரெயில்வே வர்த்தக உதவி மேலாளர் எச்.என். கங்கோபாத்யாய் கூறியுள்ளார்.


Next Story