இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியக்கிறது - பிரதமர் மோடி


இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியக்கிறது - பிரதமர் மோடி
x

திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடகாவில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆற்றிய உரையில்,

திறமை மற்றும் தொழில்நுட்பம் என்றாலே, முதலில் நினைவுக்கு வருவது பெங்களூருதான். பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் உள்ள இடம் அது. இது இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவமான சங்கமமாக இருக்கும் இடம்.

உலகளவில் நெருக்கடியின் காலம் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் இந்தியாவை ஒரு பிரகாசமான இடமாக விவரிக்கின்றனர்.

நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த நமது அடிப்படைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இந்திய இளைஞர்களின் திறமையை உலகமே வியக்கிறது. கடந்த 8 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன என்றார்.

1 More update

Next Story