தொடர் சர்ச்சையில் ரூபாய் நோட்டுகள்: பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் - பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்


தொடர் சர்ச்சையில் ரூபாய் நோட்டுகள்: பிரதமர் மோடியின் படம் இடம்பெற வேண்டும் - பாஜக எம்எல்ஏ வலியுறுத்தல்
x

ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

புதுடெல்லி,

புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் இடம்பெற வேண்டும் என டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார்.

பிரதமர் மோடிக்கு விடுத்துள்ள வேண்டுகோளில், இந்தியாவில் புதிதாக வெளியிடப்படும் கரன்சி (ரூபாய்) நோட்டுகளில் கடவுள்களான லட்சுமி மற்றும் விநாயகர் ஆகியோரது உருவங்களை இடம்பெற செய்ய வேண்டும் என மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கேட்டு கொள்கிறேன். புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், மராட்டிய பாஜக எம்எல்ஏ ராம் கதம் என்பவர் 'பிரதமர் மோடியின் படமும் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற வேண்டும்' என கூறினார். அதனை வலியுறுத்தும் விதத்தில், பிரதமர் மோடியின் படம் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளை போட்டோஷாப் மார்பிங் செய்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடியின் மாபெரும் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை நாம் எப்படி புறக்கணிக்க முடியும்? அவர் உலகம் முழுவதும் நாட்டைப் பெருமைப்படுத்துகிறார்.

இந்தியாவை மேன்மை அடையச் செய்ய மோடியின் முயற்சியை இந்தியா மட்டுமின்றி, உலகமே நினைவு கூரும் என்று பதிவிட்டுள்ளார்.


Next Story