டெல்லியில் ரூ.2,000 நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் நிலைய ஊழியர் மீது போலீசில் புகார்


டெல்லியில் ரூ.2,000 நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் நிலைய ஊழியர் மீது போலீசில் புகார்
x

கோப்புப்படம்

டெல்லியில் ரூ.2,000 நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் நிலைய ஊழியர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ரூ.2,000 நோட்டை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி தெற்கு விரிவாக்கம் பகுதி ஒன்றில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றிருக்கிறார். அங்கு ரூ.400-க்கு பெட்ரோல் நிரப்பிய அவர், ஒரு ரூ.2,000 நோட்டை கொடுத்திருக்கிறார். அப்போது அந்த நோட்டை பெட்ரோல் நிலைய ஊழியர் வாங்க மறுத்துவிட்டாராம்.

இதுகுறித்து கோட்லா போலீஸ் நிலையத்தில் அந்த வாகன ஓட்டி புகார் செய்திருக்கிறார். இந்த புகார் குறித்து ஆராய்ந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story