ஜனநாயகம் வென்றுள்ளது: தேர்தல் வெற்றிக்கு பின் ராகுல் காந்தி பேட்டி


ஜனநாயகம் வென்றுள்ளது:  தேர்தல் வெற்றிக்கு பின்  ராகுல் காந்தி  பேட்டி
x

கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலையில் உள்ளது. 224 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் 138 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக 62 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

தேர்தல் வெற்றியால் காங்கிரஸ் கட்சி உற்சாகம் கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடக மக்களுக்கு இதயத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு பாடுபட்ட கட்சித்தலைவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கர்நாடக தேர்தலில் ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது' என்றார்.


Next Story