ஜனாதிபதி தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு


ஜனாதிபதி தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு
x

பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்கா களமிறங்கியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சின்கா திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து தங்களுக்கான ஆதரவினை திரட்டி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.


Next Story