சத்குரு ஜக்கி வாசுதேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி


சத்குரு ஜக்கி வாசுதேவிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
x

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

புதுடெல்லி,

சமீபத்தில் வந்த மகாசிவராத்திரி விழா ஈஷா மையத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் கோவை ஈஷா மையத்தின் நிறுவனரும், ஈஷா அறக்கட்டளையின் தலைவருமான சத்குரு ஜக்கி வாசுதேவ் பங்கேற்று இருந்தார். மேலும் நடிகர், நடிகைகள் உள்பட பல துறை பிரபலங்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

இந்த சூழலில் தலைவலி காரணமாக ஜக்கி வாசுதேவ், டாக்டர் வினித் சூரியிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது. அதில் சத்குருவின் மூளையில் ரத்தப்போக்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனையடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். இருப்பினும் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, சத்குரு ஜக்கி வாசுதேவை தொடர்பு கொண்டு அவரிடம் நலம் விசாரித்தார். இது குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சத்குரு ஜியிடம் பேசினேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய வாழ்த்தினேன்" என்று தெரிவித்து உள்ளார்.


1 More update

Next Story