பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு


பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு
x
தினத்தந்தி 8 Sept 2023 8:59 PM IST (Updated: 8 Sept 2023 9:10 PM IST)
t-max-icont-min-icon

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்துள்ளார்.

டெல்லி,

உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது.

இதனிடையே, ஜி20 உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.



1 More update

Next Story