தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல்


தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல்
x

கோப்புப்படம் 

தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புதுடெல்லி,

நாட்டில் 2023-2024-ம் ஆண்டுக்கான காரீப் சந்தை பருவத்தில் கடந்த 3-ந்தேதி வரை 12.21 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது. இது தமிழ்நாடு, பஞ்சாப், மற்றும் அரியானா ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்முதல் மூலம் 99 ஆயிரத்து 675 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2,689.77 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் 15-வது மின் ஏலம் மூலம் 1.89 லட்சம் டன் கோதுமையும், 0.05 லட்சம் டன் அரிசியும் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இதனை 2,255 ஏலதாரர்கள் ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story