நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல்காந்தி பங்கேற்கமாட்டார் - காங்கிரஸ்


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல்காந்தி பங்கேற்கமாட்டார் - காங்கிரஸ்
x

பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 3-வது வாரத்தில் தொடங்கி 20 அமர்வுகள் நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட உள்ளது.

அதன்படி, நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி வரும் டிசம்பர் 7-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ராகுல்காந்தி பங்கேற்கமாட்டார் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. பாரத் ஜோடோ நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் அவர் கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.


Next Story