மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி யாத்திரை நாளை துவக்கம்


மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி யாத்திரை நாளை துவக்கம்
x

ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் இருந்து இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். கடந்த ஜனவரி 14ம் தேதியன்று தொடங்கிய இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நடைபயணமானது மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது.

இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது. ராகுல்காந்தியின் யாத்திரையானது நாகாலாந்து, அசாமை கடந்து தற்போது மேற்கு வங்காளத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி 2 நாள் ஓய்வுக்கு பிறகு இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கு வங்காளத்தில் நாளை நடைபெற உள்ளது . நாளைய யாத்திரை மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஜல்பாய்குரி மாவட்டத்தில் துவங்கும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்து இருக்கிறார்.


Next Story