கேரளாவில் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு


கேரளாவில் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்வு
x

கோப்புப்படம்

கேரளாவில் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள அனைத்து வகையான மாநில பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் ஓய்வு வயதை ஒரே மாதிரியாக 60 ஆக மாநில அரசு உயர்த்தி உள்ளது. இதுபற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் சிபாரிசை ஏற்று இதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது.

ஆனால், இந்த முடிவு, வேலையற்ற இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆளும் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இளைஞர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


Next Story