தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்!


தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்!
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 9 Jun 2023 6:58 AM GMT (Updated: 9 Jun 2023 7:08 AM GMT)

தகவல் அறிந்த போலீசார், ரோப் காரில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடு வழியில் சிக்கியது. இதனால், நடு வழியில் சுமார் 250 பயணிகள் சிக்கித்தவித்தனர்.

இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்த போலீசார், ரோப் காரில் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.

இது உலகின் மிகவும் உயரமான ரோப் கார் வழித்தடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story