மைதானத்தில் நாயுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி வாக்கிங்…! பயிற்சி செய்யும் வீரர்களை விரட்டும் கொடுமை!


மைதானத்தில் நாயுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரி வாக்கிங்…!  பயிற்சி செய்யும்  வீரர்களை விரட்டும் கொடுமை!
x

அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானது. வீரர்களின் பயிற்சிக்கு ஒருபோதும் இடையூறாக இருந்தது இல்லை என ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறி உள்ளார்.

புதுடெல்லி

டெல்லி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தியாகராஜ் மைதானத்திலிருந்து வீரர்களும், பயிற்சியாளர்களும் பயிற்சி எடுத்து வருவது வழக்கம். தற்போது அவர்கள் இரவு 7 மணிக்கே கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக புகார்கள் எழுந்தது. மைதானத்தில் இருந்து அனைவரையும் வெளியேறியபிறகு, டெல்லியின் முதன்மைச் செயலாளர் (வருவாய்) சஞ்சீவ் கிர்வார், தனது செல்ல நாயுடன் இரவு 7.30 மணியளவில் வாக்கிங் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில், நாங்கள் எப்போதும் இரவு 8 முதல் 8.30 மணிவரை, லைட் வெளிச்சத்தில் பயிற்சி செய்வோம். ஆனால், தற்போது 7 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேற வற்புறுத்தப்படுகிறோம். அதன்பிறகு, அதிகாரி ஒருவர் அவரது நாயுடன் வாக்கிங் செல்கிறார். எங்களது அன்றாட பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் கிர்வார் கூறியதாவ்து:-

அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றிலும் தவறானது. சில நேரங்களில் எனது நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வேன். ஆனால், வீரர்களின் பயிற்சிக்கு ஒருபோதும் இடையூறாக இருந்தது இல்லை.

மைதானத்தை விட்டு விளையாட்டு வீரர்களை வெளியேறுமாறு நான் ஒருபோதும் கூறியது கிடையாது. மைதானம் மூடப்படும் நேரம் சமயத்தில் தான், நான் செல்வேன். செல்லப்பிராணியை ட்ராக்கில் விடமாட்டேன். ஒருவேளை மைதானம் காலியாக இருந்தால் மட்டுமே, செல்லப்பிராணியை விட்டுவிடுவோம். இதனால், எவ்வித விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறினார்.

ஸ்டேடியம் நிர்வாகி அஜித் சவுத்ரி கூறியதாவது:-

மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள 4 மணி முதல் 6 வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை கருத்தில் கொண்டு, இரவு 7 மணி வரை பயிற்சி செய்திட வீரர்களை அனுமதிக்கிறோம்.

நாங்கள் 7 மணிக்கு மைதானத்தின் கேட்டை மூட வேண்டும். அரசு அலுவலக செயல்படும் நேரத்தை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் காணலாம். இதுவும் டெல்லி அரசின் கீழ் உள்ள அரசு அலுவலகமாகும். அதிகாரி ஒருவர், நாயுடன் வாக்கிங் செல்வது குறித்து எனக்கு தெரியாது. நான் 7 மணிக்கே மைதானத்தை விட்டு கிளம்பிவிடுவேன் என கூறினார்.

பல விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியை 3 கிமீ தொலைவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றியுள்ளதாகக் கூறினர்

ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் பயிற்சியாளர் கூறும் போது இங்கு இரவு 8.30 மணி வரை விளக்குகளின் கீழ் பயிற்சி செய்கிறார்கள். மெயின் ஸ்டேடியத்தின் புதுப்பிக்கும் பணி முடியாததால், கோடை விடுமுறைகள் அதிக மாணவர்கள் பயிற்சி ஈடுபட வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக" தெரிவித்தார்.


Next Story