பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு தொடர்புடைய 3 பேர் கைது..!


பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு தொடர்புடைய 3 பேர் கைது..!
x

image courtesy: instagram via ANI

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா கொலைக்கு தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

பஞ்சாபி பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் கடந்த 29-ந்தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார், இந்த கொலைச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா்.

இந்த நிலையில் சித்து மூஸ் வாலா கொலை வழக்கு தொடர்பாக 3 பேர் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கையெறி குண்டுகள், 9 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், 3 கைத்துப்பாக்கிகள், ஒரு தாக்குதல் துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் உள்ள கட்ச் பகுதியைச் சேர்ந்த துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் உட்பட 3 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரியானாவின் சோனிபட்டைச் சேர்ந்த பிரியவ்ரத் என்ற ஃபவுஜி (26), ஜாஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த காஷிஷ் (24), மற்றும் பஞ்சாப்பின் பதிண்டாவைச் சேர்ந்த கேசவ் குமார் (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


Next Story