மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிப்பு


மணிப்பூரில் இணைய சேவைக்கான தடை தொடர்ந்து நீட்டிப்பு
x

மணிப்பூரில் இணைதள சேவை முடக்கம் வரும் 25-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து மாநில உள்துறை பிறப்பித்துள்ளது.

இம்பால்,

மணிப்பூரில், கடந்த மாதம் 3-ந் தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, கடந்த மாதம் 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இத்தடை இம்மாதம் 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை பிறப்பித்துள்ளது.


Next Story